vrijdag 26 november 2010

கருவறைக்குள் சுட்டித்தனம்

தாயின் வயிற்றில் இருக்கும் சிசு ஒன்றின் வேகமான அசைவுகள் பதியப்பட்ட காணொளியானது தற்போது சுவாரஸ்யமாக பேசப்பட்டுவருகிறது. குழந்தை அங்கும் இங்கும் அசைவது வீடியோ காட்சியில் பதியப்பட்டுள்ளது.

அந்த அசாதாரண அசைவுகளை நீங்களும் கண்டு ஆச்சரியம் அடையுங்கள் !

Aliens like moving baby - Watch more Funny Videos

dinsdag 23 november 2010

மருத்துவ குணம் கொண்ட இலைகள்!'

வீரபாண்டியன் Veera


மருத்துவ குணம் கொண்ட  இலைகள்!'
______________________________________
பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் மூலக் கூறுகளாக பயன்படுத்தப்பட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

* செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும்.

* துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர்ப்பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக்கூடியது.

* வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும்.    * கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.

* புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
* கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனைப் பொருட்களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.

* தேயிலையில் இருக்கும் `காபின்' என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்' உள்ளன. மூளையை ஊக்கப்படுத்துதல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.




வல்லவனுக்கு வல்லவன்



முதலையின் பிடியிலிருந்து தப்பிய யானை!
நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே, அளவில் மிகப்பெரியது யானைதான்.

அதன் கம்பீர தோற்றத்தையும் பலத்தையும் கண்டு மிரளாத மனிதர்களும் (பாகனைத் தவிர) இல்லை. ஏனைய விலங்குகள் கூட அதனைக்கண்டால் பயத்துடனேயே விலகிச் சென்று விடுவதுண்டு.

யானை நிலத்தில் பலசாலி என்பது போல் நீரில் பலசாலி முதலையார் தான்.

ஆனால் முதலையிடம் சண்டையிட்டுத் தப்பித்துச் சென்ற யானையொன்றின் புகைப்படங்களை அண்மையில் செம்பியா எனும் நாட்டின் புகைப்படக்கலைஞர் ஒருவர் தனது கெமராவில் 'க்ளிக்' பண்ணியிருக்கின்றார்.

தாய் யானை ஒன்றும் அதன் குட்டியும் ஆற்றங்கரையில் நீர் அருந்திக் கொண்டிருக்கும் பொழுது முதலையொன்று தாய் யானையின் தும்பிக்கையை கௌவிப் பிடித்துள்ளது.

எனினும் யானை தனக்கே உரிய பலத்தால் முதலையைத் தாக்கி அதனிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சியைத் தான் அவர் பிரமாதமாகத் தனது கெமராவில் பதிந்து கொண்டிருக்கின்றார்,





maandag 22 november 2010

நகைச்சுவை,திரைப்படம்,கீதை

கவுண்டன் செந்தில்

சந்திரபாபு

சோப்பு சீப்பு கண்ணாடி

நாகேஷ் நகைச்சுவை 37

நிழல் நிஜமாகிறது

பகவத் கீதா

நகைச்சுவை,பயிற்சி,பேட்டி

Koundamani Senthil Comedy 25
golden comedy

golden comedy2

Is It Possible: Super Human Elasticity
michel jackson family interview
MR ராதா நகைச்சுவை
NS Krisnan
 

vrijdag 19 november 2010

ஹோமியோபதியில் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு

[ புதன்கிழமை, 17 நவம்பர் 2010, 05:07.08 பி.ப GMT ]
ஹோமியோபதி மருத்துவ துறையில் எந்த செக்ஸ் பிரச்சனைகள் இருந்தாலும் நிரந்தரமாக, பக்கவிளைவற்ற வகையில் குணபடுத்தலாம்.
ஹோமியோபதியில் முதலில் நம்மிடம் வரும் நோயாளியின் பிரச்சினையை நன்றாக புரிந்து கொண்டு, மனஆறுதல் மற்றும் செக்ஸ் நெறிமுறைகளை (இயற்கையின்) தெளிவாக அறிவுறுத்த வேண்டும். பின்னர் கண்டறிந்த செக்ஸ் பிரச்சனைக்கு தகுந்த ஹோமியோபதி மருந்தை நோயாளியின் மனநிலைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து கொடுத்தால் நிரந்தர குணம் உண்டாக்கலாம். ஹோமியோபதியை பொறுத்தவரை சில மருந்துகள் ஆண்களிடத்தும் சில மருந்துகள் பெண் களிடத்தும் நன்றாக வேலை செய்யும்.
(Impotence) :
Erection disorder :-
Graphites 200, Cantharis 30, Lycopodium 1m, Agnus castus-30, Aswagandha Q, Yohimbhinum Q, Damiana Q, Zincummet 30, Thyoidinum 1m, Nux.Vomica 10m. போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நோயாளியின் அறிகுறிகளுக்கு தகுந்தவாறு கொடுக்க வேண்டும். சர்க்கரை வியாதிக்கு Lactic acid - 30 Moschus 200 Specific ஆக உள்ளது.
Premature ejaculation :
Caladium 30, Bufo 30, Conium 30, Acidphos 200, Selenium 200, Phosphorus - 1m, Medorrhirnum 1m, Sulphur 200
Inhibited Sex Orgasam:-
ஆணுக்கு
1. உன்னத உணர்வற்ற நிலைக்கு :- Graphites 1m, Phosphorus 1m, Cantharis 200, Conium 200, 2. உன்னத உணர்வற்ற நிலை :- (Vascular disease - ல் ஏற்பட்டால்) - Arnica 200, Barydamur 200, Strontium Carb 30, Plumbum met 200. 3. விந்து வெளிவராத நிலை :- Aurum met 30, Argmet 30, Cuprummet 200, Platina 200, Nat. Phos 200, Nat. Mur. 1m, Ars alb 10m
பெண்ணுக்கு
1. உன்னத உணர்வற்ற நிலைக்கு :- Cantharis 30, Graphitas 30, China 30, Hyosyomus 1m, Iridunm 30, Juglans regia 30, Kaliphos. 1m, Nuphar luctum 30, Oophorinum 30.
Sex arousal disorder :-
ஆணுக்கு குறைவாகயிருத்தல் :- Aswaganda Q, Avena Q, Lycopodium 10m, Phosphorus 1m, Damiana Q, Yohimbinum Q, Origeron 30, Cantharis 30, Kaliphos 1m,
பெண்ணுக்கு குறைவாகயிருத்தல்:- Graphites 1m, Thyroidinum 1m, Sepia 200, Muriatic acid 200, Ignatia 1m, Alumina 200, Kreosote 200, Nat.mur. 200, Kaliphos 200, Damiana Q.
ஆணுக்கு அதிகமாயிருத்தல் :- (Satyriasis) Picric acid 30, Acidphos 200, Selenium 200, Syphillinum 10m.
பெண்ணுக்கு அதிகமாயிருத்தல் :- (Nymphomania) Platinum - 1m, Nat.Mur.200, Kalicarb - 1m LiLium Tig 30, Med. 200.
Priapism :-
ஆணுக்கு தாங்க முடியாத வலி, விறைப்புத் தன்மையின் பொழுது Cantharis 200, Arnica 200, Crategus 6, Lachesis 200, Nat. Phos. 200, Kalicarb 1m, Ferrum phos. 200.
Dyspareunia :-
பிறப்புறுப்பினுள் நுழையும் பொழுது ஏற்படும் வலி இருபாலருக்கும்.
ஆணுக்கு :- Picric acid 200, Plumbum met. 200, Ferrumphos 30, Cantharis 200, Nux v. 1m, Lycopodium - 10m.
பெண்ணுக்கு :- Platina 200, Lilium Tig 200, Oophorinum - 6x, Thyroidinum 6x, Alumina 30, Borax 30, Kreosote 30.
மேற்கூறிய மருந்துகள் அனைத்து நோயாளியின் நோய் அறிகுறியின் தன்மைக்கேற்பவும், மனநிலையை கருத்தில் கொண்டும் முழுவதும் ஆய்ந்து அறிந்து மருந்துகளை தேர்வு செய்து கொடுத்தால் நிரந்தர குணம் ஏற்படும். மேலும் மேற்கூறிய மருந்துகள், வீரியம் அனைத்தும் என்னுடைய அன்றாட மருத்துவப்பணியில் அதிகமாக பயன்படுத்த கூடிய மருந்துகளை மட்டுமே கூறியுள்ளேன். ஹோமியோபதியில் எண்ணற்ற மருந்துகள் உள்ளன. எனவே எந்த மருந்துகளையும் ஹோமியோபதி மருத்துவரின் ஆலோ சனைக்கும் பின் சாப்பிடுவதே நல்லது.

woensdag 17 november 2010

அம்மா வாயிலாக நான் ரசித்தவை

                                          அகாயப்பந்தலிலே (சந்தோசமாக ) 
                                           அமுதை பொழியும் நிலவே! 
                                          அன்பு நடமாடும் கலைகூடமே
                                           மண்ணுக்கு மரம் பாரமா!!
                                 சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே
                                          விண்ணோடும் முகிலோடும்
                                          விளையாடும் வெண்ணிலவே
                                                       எந்தன் உள்ளம்
                                         துள்ளிவிளையாடுவதும் ஏனோ??
                                         ஆகாயப்பந்தலிலே சோகம்

dinsdag 16 november 2010

ரசித்த நிகழ்ச்சிகள்

நகைச்சுவை
சாதனை 1
சாதனை 2