vrijdag 21 oktober 2011

ஆதிவாசி மூலிகை மருந்து உண்மையா ?


20 October, 2011 
நாள் தோறும் இயற்கை மூலிகை மருந்து, ஹோமியோபதி மருந்து ஆதிவாசி மூலிகை மருந்து என பல மருத்துவச் சித்தர்கள் ரீ வியிலும் ரேடியோக்களிலும் பல விளம்பரங்களைக் கொடுக்கின்றனர். இவர்கள் 108 வகையான வியாதிகளுக்கு தங்களிடம் மருந்து இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களால் சில வியாதியைக் குணப்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். நம்பாமல் இருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் சித்தவைத்திய முறையில் பாரம்பரியம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை. பல காலமாக வழி வழி வந்த சந்ததியினர் பாவிக்கும் சில அரியவகை மருந்துச் செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்த முடியும். ஆனால் அதனையும் தாண்டி கான்சர், நீரிழிவு நோய்(டயபிட்டிக்) மற்றும் பிள்ளையில்லாப் பிரச்சனை என மேலும் பல நோய்களைத் தம்மால் தீர்க்க முடியும் என இவர்கள் கூறுவதில் தான் சிக்கல்கள் இருக்கிறது.

சில வியாதிகளை இவர்களிடம் சென்றால் குணப்படுத்தலாம் ஆனால் நீரிழிவு(டயபிட்டிக்) போன்ற நோய்களுக்கும் இவர்களிடம் மருந்து இருக்கிறது. அது முற்றாகக் குணமாகிவிடும் என்று இவர்கள் விளம்பரப்படுத்துவது தான் தாங்க முடியவில்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைட்ரேட் எமது உடலில் சக்கரையாக மாற்றப்பட்டு அது ஈரல் வழியாக ரத்தத்தில் கலக்கிறது. அப்போது ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரிக்கும். அப்போது அதனைக் கட்டுப்படுத்த பன்கிரியாஸ் அல்லது கணையம் எனப்படும் சுரப்பியில் இருந்து இன்சுலின் என்னும் பதார்த்தம் சுரக்கிறது. இது ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதுவே எமது உடல் அமைப்பு ஆகும்.

பான்கிரியாஸ் அல்லது கணையச் சுரப்பியானது எமது வயிற்றுப்பக்கத்துக்கு இடது பக்கத்தில் இடுப்புக்கு சற்றுமேல் காணப்படும் ஒரு சுரப்பி. இதில் காணப்படும் பேட்டா(BஏTஆ) செல்கள் தான் இன்சுலினைச் சுரக்கிறது. இந்த பேட்டா செல்கள் அழிந்து போவதும் உண்டு பலருக்கு வயதாக வயதாக அதன் எண்ணிக்கை குறைவதும் உண்டு. முற்றாக அழிந்துபோய் அதன் உற்பத்தி தடைப்பட்டால் குறித்த நபர் இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேண்டும். இல்லை பேட்டா செல் குறைவாகக் காணப்பட்டால் அந் நபர் உணவுக் கட்டுப்பாடு மற்றும் சில குழிசைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். எது எப்படி இருந்தாலும் உடலிலேயே மிகவும் நுண்ணிய மற்றும் விசித்திரமான அல்லது அபூர்வமான செல்களாக பேட்டா செல்கள் பார்க்கப்படுகிறது.

செயற்கை இரத்தம் இருக்கிறது, சிறு நீரகத்தை மாற்றுகிறார்கள் ஏன் இதயத்தைக் கூட மாற்றுகிறார்கள். ஆனால் இந்த பேட்டா செல்களை வேறு ஒருவரிடம் இருந்து எடுத்து வைக்கவும் முடியும் அப்படி வைத்தாலும் அது வேலைசெய்யாது. வயதான முதிர்ந்தவர்களுக்கு ஞாபக சக்தி அற்றுபோகும்போது சிறு குழந்தைகளின் மூளைகளில் உள்ள ஞாபக செல்களை எடுத்து வயதானவர் மூளைகளில் செலுத்தி அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் விதம் கூடக் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் இந்த பேட்டா செல்களை ஏன் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது பெரும் கேள்விக்குறி. அதுமட்டுமல்ல இது கடவுளின் ஒரு இரகசியத் திட்டமாகவும் இருக்கலாம். ஏன் எனில் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் அதுவே ஜமன் என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம்.

இந் நோய் இதயத்தைப் பாதிக்கும், கண்பார்வையை மங்கச்செய்யும், இல்லை கண் பார்வையை இழக்க நேரிடும், ரத்த அழுத்தத்தைக் கூட்டும், அதாவது எமது உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. அதனால் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அவை பரப்பளவில் பெருகும் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் அது சுருங்கும். அதனால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். ஆனால் இந்த ரப்பர் போன்ற தன்மையை நீரிழிவு நோய் பாதிக்கிறது. நாளாக நாளாக ஒரு ரப்பர் எவ்வாறு கட்டி பட்டு தனது ஈய்ந்துகொடுக்கும் தன்மையை இழக்குமோ அதுபோல எமது நாடி நாளங்கள் மாற இந் நோயே காரணம். அதுமட்டுமா சிறு நீரங்களைப் பாதித்து அதனைச் செயலிழக்கச் செய்யும். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை குறைக்கும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறையும். பார்சவாதம் மற்றும் மூளைக் கோளாறுகளை உண்டாக்கும். இன்னும் எத்தனையோ வேலைகளைக்ச் செய்து இறுதியில் மனிதனை முடிப்பது இந் நோய்தான். வேறு யாரும் அல்ல.

இப்படியான ஒரு நோய்தான் நிரிழிவு நோயாகும். ஆனால் நமது ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நாம் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக மதுவை அளவுக்கு அதிகமாகப் பாவிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் அல்க்கஹால் அளவு அதிகரிப்பதால் அது பான்கிரியாசை தாக்கும். அதனால் அங்கே உற்பத்தியாகும் பேட்டா செல்கள் குறைவடைகின்றன. கணையம் என்னும் சுரப்பி முற்றாகப் பாதிப்படைந்து அதற்குப் பதிலாக இன்சுலினை ஊசிமூலம் எடுப்போர் சில விடையங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது அவர்கள் எடுக்கும் இன்சுலினின் அளவு மற்றும் உணவுப் பழக்கவழங்கள் என்பனவாகும்.

ஆனால் டைப்- 2 டயபிட்டிக் (நீரிழிவுநோய்) கொண்டவர்கள் பல விடையங்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக அவர்கள் கணையம் வழமையாகச் சுரக்கவேண்டிய அளவு இன்சுலினை விட குறைவாகவே சுரப்பதால் அவர்கள் காபோஹைரேட் அல்லது சக்கரை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் மற்றும் சக்கரை உடலில் உள்ள ஈரல் மூலமாக இரத்தத்தில் கலக்கிறது. பைஃபர் என்று சொல்லப்படும் நார் சத்தானது மிகவும் முக்கியமானது. அதாவது இந்த நார்சத்தானது ரத்தத்தில் சக்கரை கலக்கும் அளவின் வேகத்தை கட்டுப்படுத்தும். அதனால் விரைவாக ரத்தத்தில் கலக்கும் சக்கரை மிக மிகச் சிறிய அளவில் கலக்கும். இந்த நார் சத்தானதும் பல பச்சை பழங்களிலும் டேட்ஸ் மற்றும் பல உணவுகளில் காணப்படும்.

தவிடு தினை தானியங்களிலும் இவை இருக்கிறது. மற்றும் மொட்டைக் கறுப்பன் என்று சொல்லப்படும் கைக் குத்தரிசியிலும் நார் சத்து அதிகம். அதனை எம் முன்னோர் உண்பதால் தான் அவர்கள் 100 வருடம் உயிர்வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது பாஸ்மதி போன்ற அரிசி வகைகள் வந்ததும் அதை மக்கள் உண்டு மகிழ்வதும் பெரிதும் துரதிஷ்டவசமானது. பாஸ்மதி அரிசியில் காபோஹைரேட் மிக அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இதனைத் தவிர்ப்பது நல்லது. இன்னும் சொல்லப்போனால் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட சக்கரை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது ஏன் எனில் நாம் கணையத்துக்கு பளுவைக் கொடுக்கக்கூடாது.

நீரிழிவு நோய் ஏற்பட முதல் காரணமாக இருப்பது மரபியல் பண்பாகும். தாய் தந்தையருக்கு இந்த நோய் இருந்தால் அது இயல்பாகவே அவர்கள் பிள்ளைகளுக்கும் வரும். மற்றும் மதுவை அளவுக்கு அதிகமாகப் பாவிப்பவர்கள் மற்றும் உடல் பருமன் கூடியவர்களையும் இது தாக்குகிறது. மூன்றாவதாக பெண்கள் கர்பம் தரித்து பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேளை இந் நோய்வரலாம். இதனைத் தடுக்க பெண்கள் சற்று முன்னதாகவே பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளல் நல்லது. அதாவது 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையே பிள்ளைகளைப் பெற்றுகொண்டால் இந் நோயின் தாக்கத்தில் இருந்து தப்புவதோடு ஆரோக்கியமான பிள்ளைகளையும் பெற்றெடுக்க முடியும்.

Geen opmerkingen:

Een reactie posten