woensdag 5 oktober 2011

அதிர்ஷ்டசாலி!!

(வீடியோ இணைப்பு)

இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே பல வேலைகள் இருந்தாலும் எல்லாரும் பொதுவாக பயப்படுவது அவர்களுடய மரணத்திற்கு தான். உலகில் பிறந்து விட்டாலே மரணம் எனபது நிச்சயமாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மரணத்தை யாராலும் பார்க்க முடியாது அதை உணர்வதுற்குள் நாம் உயிர் பிரிந்து விடும். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசளிகளால் மரண வாசல் வரை சென்று மீண்டு வர முடிகின்றது.




இது மிகவும் அரிதான ஒன்றாக தான் இருக்கும் இது போல அமெரிக்காவில் மரண வாயில் வரை சென்று சிறு காயம் கூட இல்லாமல் தப்பி இருகின்ற அந்த அதிர்ஷ்டசளியை இந்த காணொளியில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் இருக்கின்ற கலிபோர்னியாவில் ஒரு கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தரையில் சாய்ந்து இருகின்றது.



அது சாயும் நேரத்தில் அங்கு சாலையில் சென்று கொண்டு இருந்த ஒரு காரின் மீது விழ அந்த கார் அடையாளம் தெரியாத மாதிரி சிதைந்து உள்ளே சிக்கி தவித்துக் கொண்டு இருந்திருகின்றது.

உடனே அங்கு வந்த மீட்பு படையினர் பெரிய கிரேன் உதவியோடு பெரிய வாகனத்தை அகற்ற அவர்களுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காரினுள் இருந்த அந்த நபர் உயிரோடு இருந்தார் பின்னர் காரின் கதவை உடைத்து அவரை மீட்ட பொழுது அவர் எவ்விதமான காயங்கள் ஏதும் இன்றி அதிலிருந்து இறங்கினர். இதை அங்கு பார்த்த அனைவருக்குமே ஆச்சரியத்தை தந்தது.

மருத்துவர்கள் சொல்லும் பொழுது அவர் இருந்த கார் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போய் விட்டது ஆனால் இவர் சிறு காயங்கள் இன்றி உயிர் பிழைத்து இருப்பது மிகவும் ஆச்சரியமான் விஷயம் என்று வியப்போடு சொல்லி இருகின்றார்கள்.
04 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten